தமிழ்நாடு

tamil nadu

அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி...! ட்விட்டர் புலவர் ஹர்பஜன்

சென்னை : ட்விட்டரில் சவால்விட்ட கொல்கத்தா அணிக்கு, சென்னை வீரரும் ட்விட்டர் புலவருமான ஹர்பஜன் பதிலடி கொடுத்துள்ளது சென்னை ரசிகர்களிடையே உற்சாசகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Apr 10, 2019, 2:03 PM IST

Published : Apr 10, 2019, 2:03 PM IST

Harbhajan

சென்னை அணியை எதிர்கொள்ளும் போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா அணியின் ட்விட்டர் பக்கத்தில் மூன்று நாளில் சந்திப்போம் என சென்னை அணிக்கு சவால்விட்டிருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,

அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா சென்னைகிட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போடவச்சுருச்சா தல வேட்டு. அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி. சிஎஸ்கே மேட்சினாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா.இப்ப சொல்லு நாங்க கெத்தா

என பதிவிட்டுள்ளார். இது சென்னை ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details