தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2019, 10:26 AM IST

ETV Bharat / sports

'ஜெயிப்பானா? மாட்டானா?' சென்னை அணியை பங்கமாய் கலாய்த்த வெங்கட்பிரபு!

நேற்றைய ஐபிஎல் போட்டியின் இறுதி நிமிடங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு சென்னை அணியை இயக்குனர் வெங்கட் பிரபு பங்கமாய் கலாய்த்துள்ளார்.

வெங்கட் பிரபு

ஐபிஎல் கிரிக்கெட்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்றையப் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதின. அதில் சென்னை அணி போட்டியில் இறுதி ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை-டெல்லி அணிகளிடையேயானப் போட்டி இறுதி ஓவர்வரை சென்றதால் சென்னை ரசிகர்கள் சிறிது நேரம் பரபரப்பாகினர். ஏனென்றால், இறுதி ஓவரை வீசியது தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சாளர் ரபாடா. இருந்தும் பிராவோ பவுண்டரி அடித்து வெற்றியைத் தேடித்தந்தார்.

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 படத்தின் இறுதிக் காட்சியில் வல்லரசு பேசும் 'கிரீசுக்குள்ள வருவானாமாட்டானா’ எனப் பரப்பரப்பாக சிவாவிடம் விளக்குவார். அதைப்போலவே நேற்றையப் போட்டி இருந்ததாக ட்விட்டரில் பதிவிட்டு சென்னை அணியைக் கிண்டல் செய்துள்ளார்.

மேலும், சென்னை அணியின்இரண்டாவது போட்டியே பரபரப்பாக இருந்ததால், வரும் போட்டிகளில் கூடுதல் பரபரப்பாக இருக்கும் எனவும் ரசிகர்களிடையேஎதிர்பார்க்கப்புகள் நிலவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details