ஐபிஎல் கிரிக்கெட்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்றையப் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதின. அதில் சென்னை அணி போட்டியில் இறுதி ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை-டெல்லி அணிகளிடையேயானப் போட்டி இறுதி ஓவர்வரை சென்றதால் சென்னை ரசிகர்கள் சிறிது நேரம் பரபரப்பாகினர். ஏனென்றால், இறுதி ஓவரை வீசியது தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சாளர் ரபாடா. இருந்தும் பிராவோ பவுண்டரி அடித்து வெற்றியைத் தேடித்தந்தார்.