தமிழ்நாடு

tamil nadu

குடும்பத்துடன் ஜனநாயக கடமை ஆற்றினார் சச்சின்!

By

Published : Apr 29, 2019, 4:49 PM IST

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், தனது குடும்பத்துடன் பாந்த்ரா மக்களவைத் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

குடும்பத்துடன் ஜனநாயகக்கடமை ஆற்றினார் சச்சின்!

17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில், மூன்று கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11, 18, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது.

இதில், மகராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், தனது குடும்பத்தோடு வந்து வாக்கினை பதிவு செய்தார்.

இதில், அவரது மகள் சாரா டெண்டுல்கர், மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஆகியோர் முதல்முறையாக தங்களது வாக்கினை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details