தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 26, 2020, 12:15 PM IST

ETV Bharat / sports

சொந்த மண்ணில் முதல் டி20 தொடரை வென்ற பாகிஸ்தான்!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Pakistan defeat Bangladesh in second T20I, seal series win
Pakistan defeat Bangladesh in second T20I, seal series win

சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடிய 10 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தாலும், தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக, சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது மண்ணில் நடைபெற்ற டி20 தொடரிலும் படுமோசாக தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, ஒரேயோரு ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது.

விக்கெட்டைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் பாக். வீரர்கள்

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தமிம் இக்பால் 65 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஹஸ்னைன் இரண்டு, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, 137 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க வீரர் அசான் அலி டக் அவுட்டாக, பாகிஸ்தான் அணி 1.4 ஓவர்கலில் ஒரு விக்கெட்டை இழந்து ஆறு ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாபர் அசாம் - முகமது ஹபிஸ்

இந்த நிலையில், ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம், முகமது ஹபிஸ் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால், பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எட்டி இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பாபர் அசாம்

பாபர் அசாம் 66 ரன்களுடனும், முகமது ஹபிஸ் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இப்போட்டியின்மூலம், பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் 66 ரன்கள் அடித்த பாபர் அசாம் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஐந்து டி20 தொடரில் தொடர்ந்து தோல்வியடைந்த பின், பாகிஸ்தான் அணி வெல்லும் முதல் டி20 தொடர் இதுவாகும். அதுவும் சொந்த மண்ணில் இந்தத் தொடர் வென்றது பாகிஸ்தான் அணிக்கு மறக்க முடியாதத் தருணமாக அமைந்துள்ளது. இறுதியாக அந்த அணி 2018இல் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நாளை லாகூரில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:இந்தியா இங்கு வரவில்லை என்றால்? பாகிஸ்தான் போர்க்கொடி!

ABOUT THE AUTHOR

...view details