கிரிக்கெட்டின் சேஸ் மாஸ்டர், ரன் மெஷின் என்று அழைக்கப்படுவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 2008இல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்றவர். இதனால், 2008ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின், 2012 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 321 ரன்களை 40 ஓவர்களுக்குள் இந்திய அணி எடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போட்டியில், தனது சிறப்பான பேட்டிங்மூலம் 86 பந்துகளில் 133 ரன்களை விளாசி இந்திய அணி 36.4 ஓவர்களிலேயே 321 ரன்களை சேஸ் செய்ய வைத்தார். இதனால், கிரிக்கெட்டின் சேஸ் மாஸ்டர் என அழைக்கப்பட்டார். அதன்பின் ஏற்ற, இறக்கங்களை மாறிமாறி விராட் கோலி சந்தித்துவந்தார். ஆனால், 2016க்கு பிறகு கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக இன்றளவும் அறியப்படுகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் 50க்கும் அதிகமாக ஆவரேஜ் வைத்திருக்கும் முதல் வீரர் இவர்தான்.
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை குவித்த முதல் வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார். 2014இல் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன்பின் 2017இல் தோனி ஒருநாள், டி20 போட்டிக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து தானாக விலகினார். இதனால், கோலி மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டன் ஆனார்.