தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 6, 2020, 7:56 PM IST

ETV Bharat / sports

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கடிதம்

ஐபிஎல் போட்டிக்கான பரிசுத்தொகை 50 விழுக்காடு குறைக்கப்பட்ட விவகாரம் குறித்து பதிலளிக்க ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

miffed-ipl-owners-to-send-joint-letter-to-bcci-questioning-prize-money-cut
miffed-ipl-owners-to-send-joint-letter-to-bcci-questioning-prize-money-cut

ஐபிஎல் போட்டிகளுக்கான பரிசுத்தொகை இந்த ஆண்டு 50 விழுக்காடுவரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ஐபிஎல் அணியின் அலுவலர் ஒருவர் பேசுகையில், '' ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகையை குறைப்பது பற்றி அணிகளின் உரிமையாளர்கள் யாருடனும் ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்த விவகாரம் பற்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணிதான் முதலில் விவாதம் நடத்தியது. இதுகுறித்து கடிதம் அனுப்பலாம் என முடிவு செய்தபோது மும்பை மற்றும் சென்னை அணிகளைத் தவிர்த்து அனைத்து அணிகளும் ஒப்புக்கொண்டனர். சென்னை, மும்பை அணிகளின் உரிமையாளர்களை தொடர்புகொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

ஐபிஎல் போட்டிக்கான பரிசுத்தொகை

இறுதியாக அனைத்து உரிமையாளர்களும் கையெழுத்திட்ட கடிதம் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரங்களில் அது அவரது கைகளில் இருக்கும்.

ஏற்கனவே ஆல் ஸ்டார்ஸ் போட்டிகள் பற்றியும் எங்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. டிவியில் பார்த்துதான் நாங்கள் தெரிந்துகொண்டோம்'' என்றார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி

ஏற்கனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் சொன்ன தேதியில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:5 பந்துகளில் 5 சிக்சர்கள் பறக்கவிட்ட தல... ஐபிஎல்லுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details