தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 28, 2020, 11:16 AM IST

ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக லால், நாயக் நியமனம்!

இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் (சிஏசி) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மதன் லால், முன்னாள் வீராங்கனை சுலக்ஷனா நாயக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Madal Lal, Sulakshana Naik named in Cricket Advisory Committee
Madal Lal, Sulakshana Naik named in Cricket Advisory Committee

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் இந்திய அணியைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் கடந்த 18ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தப் பதவிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பரோடாவைச் சேர்ந்த நயன் மோங்கியா, ஹரியானாவின் சேட்டன் சர்மா, மத்தியப் பிரதேசத்தின் ராஜேஷ் ஷவான், மும்பையின் அஜித் அகர்கர் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனையடுத்து இந்தக் குழுவை நேர்காணல் செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா, சி.ஏ.சி. உறுப்பினர்களைத் தேர்வுசெய்தார்.

வீரர்கள் தேர்வுக்குழு பதவிக்கு விண்ணப்பித்தவர் பட்டியல்

அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால், சுலக்ஷனா நாயக் ஆகியோர் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம்பிடித்துள்ளனர். மேலும் இக்குழுவில் இடம்பெறும் மூன்றாம் நபர் பற்றிய தகவல் எதையும் வெளியிடப்படவில்லை.

மேலும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், இந்த கிரிக்கெட் ஆலோசனைக் குழுவே தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக வருகின்ற ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வுசெய்யும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இக்குழு உறுப்பினர்களே தேர்வுக்குழு உறுப்பினர்களை நேர்காணல் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற மார்ச் மாதம் 12ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்வுக்குழு போட்டியில் களமிறங்கிய அகர்கர் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details