கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரரைத் தேர்வுசெய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்விருது வழங்குவது வழக்கம். அதன்படி 2011-20ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்குப் பரிந்துரைசெய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐசிசி கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விளங்கிய வீரர், வீராங்கனைகளை ஐசிசி இன்று (டிச.28) அறிவித்தது. அதன்படி இந்த பத்து ஆண்டுகளின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்டது.
இதன்படி, ஐசிசியின் பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வென்றுள்ளார். மேலும், பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய ஒருநாள் வீரருக்கான விருதும் விராட் கோலிக்கு வழங்க்கப்பட்டுள்ளது.