தமிழ்நாடு

tamil nadu

இலங்கை, ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு: பிசிசிஐ

ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

By

Published : Jun 12, 2020, 6:27 PM IST

Published : Jun 12, 2020, 6:27 PM IST

bcci-calls-of-indias-tour-of-zimbabwe-due-to-covid-19-pandemic
bcci-calls-of-indias-tour-of-zimbabwe-due-to-covid-19-pandemic

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது கரோனா வைரஸ் காரணமாக இந்திய அணி ஜூன், ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இலங்கை, ஜிம்பாப்வே நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜூன் 24ஆம் தேதி முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் பங்கேற்கவிருந்தது. அதேபோல் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் ஆடவிருந்தது.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை, ஜிம்பாப்வே நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது'' என்றார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்திய வீரர்கள் இதுவரை பயிற்சிக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details