தமிழ்நாடு

tamil nadu

தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றோடு வெளியேறிய இந்திய இணை!

By

Published : Jan 14, 2021, 2:28 PM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் ரங்கிரெட்டி - சிராக் செட்டி இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Thailand Open: Doubles pair of Rankireddy, Shetty bow out
Thailand Open: Doubles pair of Rankireddy, Shetty bow out

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் பேட்மிண்டன் தொடரான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன், ஜனவரி 12இல் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை - இந்தோனேசியாவின் முகமது அசன், ஹேந்திர செட்டியாவன் இணையுடன் மோதியது.

பரபரப்பான இப்போட்டியிம் தொடக்கம் முதலே அசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய இணைக்கு அதிர்ச்சியளித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்திலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அசன் இணை 21-17 என்ற கணக்கில் அதனையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இந்தோனேசியாவின் முகமது அசன், ஹேந்திர செட்டியாவன் இணை 21-18, 21 -17 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணையை வீழ்த்தியது.

இதனால் ரங்கிரெட்டி, சிராக் செட்டி இணை தாய்லாந்து ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க:IND vs AUS: பிரிஸ்பேன் டெஸ்ட்டிற்கு தயாராகும் ஆஸி

ABOUT THE AUTHOR

...view details