தமிழ்நாடு

tamil nadu

ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதிச்சுற்றில் வெளியேறிய இந்திய இணை

By

Published : Mar 20, 2021, 8:26 AM IST

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

All England: Lakshya Sen crashes out after Ashwini-Sikki pair's loss in quarters
All England: Lakshya Sen crashes out after Ashwini-Sikki pair's loss in quarters

சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது.

இதில் நேற்று(மார்ச் 19) நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை, நெதர்லாந்தின் செரில் சீனென் - செலினா பீக் இணையுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து இணை முதல் செட்டை 24-22 என்ற கணக்கில் போராடி வென்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இந்த இணை 21-12 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி இந்திய இணைக்கு அதிர்ச்சியளித்தது.

இதன்மூலம் நெதர்லாந்து இணை 24-22, 21-12 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணையை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. இத்தோல்வியின் மூலம் இந்திய மகளிர் இணை ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அபராதம் - ஐசிசி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details