தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவத்திற்கே சென்று விடுகிறேன் - சாய் பல்லவி

‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்தது இனிமையான அனுபவம் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

By

Published : May 23, 2019, 3:26 PM IST

File pic

இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் முதல் முறையாக உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில் செல்வராகவன் குறித்து சாய்பல்லவி கூறியதாவது, ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். செல்வராகவன் முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோயில் மாதிரி, ஆகையால் கோயிலுக்கு செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறினார்.

நான் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று பின்னர் புரிந்துகொண்டேன். இவரிடம்தான் ஒழுக்கம், நடிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்.

சாய் பல்லவி

ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை, நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்துவிடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன்.

மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல் என் அம்மா உங்களிடம் பேசினார்களா? என்று செல்வராகவனிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை நான் கேட்டது கிடைத்துவிட்டது என்று கூறினார்.

பிறகு சூர்யா சாரிடம் கேட்டபோது, நானும் நிறைய ‘டேக்’ வாங்கித்தான் நடிக்கிறேன் என்றார். அதன் பிறகுதான் எனக்கு சிறிது ஆறுதலாக இருந்தது என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details