சென்னை:பழைய வண்ணாரப்பேட்டை, தீக்குளிக்கும் பச்சை மரம், மணல் நகரம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு, சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமான பிரஜன், நடித்த அரசியல் கலந்த த்ரில்லர் படத்தின் தயாரிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இப்படம், ஸ்ரீ கிருஷ்ணா ஃபிலிம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில், எஸ்.வி. சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணைத் தயாரிப்பில் சங்கர், கென்னடி இருவரது இயக்கத்தில் உருவாகவுள்ளது. இக்கதையில் மற்றொரு நாகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார். இவர்களுடன் இணைந்து கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பள்ளி மாணவர் விஜய் யாட்லீ இசையமைக்க, வினோத் குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.