தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கார்த்தி பட நடிகை கைது

டெல்லியில் உள்ள ரோகினி சிறையில் சுகேஷ் இருக்கிறார். அவர் அடிக்கடி மூன்று பாலிவுட் பிரபலங்களை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

By

Published : Sep 6, 2021, 5:17 PM IST

leena maria
leena maria

சென்னை: கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான படம் ’பிரியாணி’. இதில் நடித்த நடிகை லீனா மரிய பால், ரூ. 200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு மோசடி வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகரின் காதலி லீனா மரிய பால் டெல்லியி்ல் கைது செய்யப்பட்டுள்ளார். லீனா மரிய பாலை டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது.

டெல்லியில் உள்ள ரோகினி சிறையில் சுகேஷ் இருக்கிறார். அவர் அடிக்கடி மூன்று பாலிவுட் பிரபலங்களை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சிம் கார்ட் லாக் எடுக்கும் முயற்சியில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில், லீனா கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஹர்பஜனின் ‘பிரண்ட்ஷிப்’ டிரெய்லர் வெளியானது

ABOUT THE AUTHOR

...view details