தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' திரைப்படத்தை இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கி வருகிறார்.
படத்தில் ஜெய லலிதாவின் தோற்றத்தில் நடித்த கங்கனா ரனாவத், அதற்காக தொடர் பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீஸரும் சமீபத்தில் வெளிவந்து, மக்கள் மத்தியில் பேசு பொருளானது.
படத்தின் டீஸர் வெளியானதிலிருந்தே கங்கனா ரனாவத்தின் மேக் அப் செய்யப்பட்ட தோற்றத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
'சோட்டா பிம்' கார்டூனில் வரும், டுன் டுன் ஆன்ட்டி, 'பதாய் ஹோ பதாய்' திரைப்படத்தில் வரும் குண்டு தோற்றத்தைக் கொண்ட அனில் கபூர், ஸ்மிருதி இரானி ஆகியோருடன் கங்கனாவின் தோற்றம் ஒப்பிடப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது.
இதனால் கடுப்பான கங்கனாவின் சகோதரி, ரங்கோலி சந்தேல், தனது ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்களுக்குப் பதிலடி கொடுக்கும் வண்ணம் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார்.
அப்பதிவில் 'கண்கள் இருப்பவர்கள் ப்ரோஸ்தடிக் வேலைகளைக் காண்பார்கள். மீதமுள்ளவர்கள், எல்லாம் சமோசா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பகலை இரவென்றும், இரவை பகலென்றும் கூறுவார்கள். இவர்கள் எல்லாம் முக்கியமில்லாதவர்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மக்கள் செல்வனுக்கு பிடித்த அந்த 4 பேர்