தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2020, 1:34 PM IST

ETV Bharat / sitara

'தேவைகளுக்கு அதிகமாக வாழ்ந்து வருகிறோம்' - ஷாரூக் கான்

ஊரடங்கு காலம் கற்பித்த பாடங்கள் குறித்து ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SRK
SRK

கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஷாரூக் கான் தேசிய ஊரடங்கு அறிவித்த நாள் முதல் தினமும் ஏதாவது புகைப்படம், வீடியோ, கரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிக்கை என தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

தற்போது சூரியன் மறையும் சமயத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபியை ஷாரூக் கான் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இந்த ஊரடங்கு நமக்கு கற்பித்த பாடம் என்னவென்றும் பதிவிட்டுள்ளார்.

அதில், "மனிதர்களான நாங்கள் எங்கள் தேவைகளுக்கு அதிகமாக வாழ்ந்து வருகிறோம். அடிப்படை தேவைகளை விட அதிக வசதிகளுடன் வாழ்ந்து வருகிறோம். இதில், பெரும்பாலானவை எங்களுக்குத் தேவையில்லை. ஆனால், எங்களைச் சுற்றி வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அது தேவையான ஒன்று என்பதை இப்போது உணர்ந்துள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இனிவரும் நாள்கள் மிகவும் முக்கியமானது - ஷாருக்கான் வெளியிட்ட கரோனா விழிப்புணர்வு காணொலி

ABOUT THE AUTHOR

...view details