கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஷாரூக் கான் தேசிய ஊரடங்கு அறிவித்த நாள் முதல் தினமும் ஏதாவது புகைப்படம், வீடியோ, கரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிக்கை என தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
தற்போது சூரியன் மறையும் சமயத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபியை ஷாரூக் கான் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இந்த ஊரடங்கு நமக்கு கற்பித்த பாடம் என்னவென்றும் பதிவிட்டுள்ளார்.