தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 9, 2021, 6:11 PM IST

ETV Bharat / sitara

தீபிகா படுகோனேவின் கணவராக இருப்பது பெருமை - நடிகர் ரன்வீர் சிங்

மும்பை: நடிகை தீபிகா படுகோனேவின் கணவராக இருப்பது எனக்கு மிகப்பெருமையாக இருப்பதாக நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

Ranveer Singh
Ranveer Singh

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள், பரப்புரைகள், தனது புதிய படங்களைப் பற்றிய செய்திகளை அறிவிக்கும் வண்ணமாக புதிய பிரத்தேயகமான வலைதளப்பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார். இது குறித்து தீபிகா தனது சமூகவலைதளப்பக்கங்களில் சிறிய வீடியோ ஒன்றை பதிவிட்டார் .

தீபிகா படுகோனேவின் வலைதளப்பக்கம்

தற்போது இந்த வலைதளம் குறித்து நடிகரும் தீபிகாவின் கணவருமான ரன்வீர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், " தீபிகா என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிக அற்புதமான நபர். அவர் என் மனைவி என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. தீபிகாவிற்குள் ஒரு அற்புதமான உலகம் இருக்கிறது. அன்பு, இரக்கம், புத்திசாலித்தனம், அழகு, கருணை, நிதானம் போன்றவற்றால் அவர் ஒரு உண்மையான கலைஞராக இருக்கிறார். உலகின் மிகச்சிறந்த நடிகைகளில் அவரும் ஒருவராக இருக்கிறார்.

நான் சில நேரங்களில் அவரது செயல்களை கண்டு வெகுவாக பாராட்டியுள்ளேன். அவர் நீதியும் நல்லொழுக்கமும் மரியாதையும் கலந்த பெண். அவர் ஒரு நல்ல ஆத்மா. நான் உலகின் பெருமைமிக்க கணவன் என்று கூறுவதில் எனக்கு பெருமை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details