பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது சமூக வலைத்தளபக்கமான இன்ஸ்டாகிராமில், கடந்தாண்டு கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் முன்பு தீபிகா படுகோனே தனது அறையில் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அறையில் குறும்புடன் தீபிகா: கேள்வி எழுப்பிய கார்த்திக்!
மும்பை: தீபிகா படுகோனே கடந்தாண்டு தனது கேன்ஸ் விழாவின் ஒரு த்ரோபேக் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தக் கேள்வி பதிலை தற்போது நெட்டிசன்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. இந்த வீடியோ சில மணி நேரத்தில் 3.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது. தீபிகாவும், கார்த்திக்கும் சமூக ஊடகங்களில் இதுபோல் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல.
சமீபத்தில் கார்த்திக் ஆரியன் தனது தாடியை ஷேவ் செய்ய வேண்டுமா.... அல்லது வேண்டாமா என்று ரசிகர்களிடம் சமூகவலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தீபிகா ஒரு கையை உயர்த்திய ஈமோஜியுடன் கருத்து தெரிவித்தார். இது கார்த்திக் தனது தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதற்கு முன்பு தீபிகா போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கார்த்திக் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.