தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஃபைனான்ஷியர் கொலை: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

மதுரை: அலங்காநல்லூரில் கடந்த வெள்ளிக் கிழமை பைனான்ஷியர் ஒருவரை ஆறு இளைஞர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

kolai

By

Published : Jun 3, 2019, 4:59 PM IST

Updated : Jun 3, 2019, 5:32 PM IST

அலங்காநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன்(55) விவசாயியான இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தன் வீட்டின் முன்பாக இளங்கோவன் அமர்ந்திருந்தார்.

அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கூலிப் படை, வீட்டின் வெளியே இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இளைஞர்களின் அரிவாள் வெட்டுகளில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார் இளங்கோவன். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாளே (ஜூன் 1) இளங்கோவன் உயிரிழந்தார்.

இது குறித்து அலங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இளங்கோவனின் இரண்டாவது மனைவியே கூலிப் படையை ஏவிவிட்டு கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டுத் தலைமறைவான ஆறு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பதறவைக்கும் சிசிவிடி காட்சிகள்

இந்நிலையில், இளங்கோவனை கொலை செய்யும், நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளின் பதிவு வெளியாகியுள்ளது.

Last Updated : Jun 3, 2019, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details