தமிழ்நாடு

tamil nadu

தி.நகர் நகைக்கொள்ளை - 5 தனிப்படைகள் அமைப்பு!

By

Published : Oct 21, 2020, 4:36 PM IST

சென்னை: நகைக்கடையின் பூட்டை உடைத்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 5 உதவி ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

enquiry
enquiry

தி.நகர் மூசா தெருவில் உள்ள உத்தம் மொத்த வியாபார நகைக்கடையை ராஜேந்திர குமார், தருண், பரிஸ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (அக்டோபர் 20) காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அலமாரியிலிருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான, சுமார் 5 கிலோ தங்க, வைர, வெள்ளி நகைகள் கொள்ளையடைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கொள்ளை நடந்த இடத்திற்கு விரைந்த காவல் இணை ஆணையர் பாபு மற்றும் தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர், நேரில் சென்று கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். மாம்பலம் காவல்துறையினரும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தி.நகர் நகைக்கொள்ளை - 5 தனிப்படைகள் அமைப்பு!

இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க உதவி ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் மாநகர எல்லைகள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகைக்கடை உரிமையாளர்களை தனிப்படை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அடுத்தடுத்து விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:தி.நகரில் 5 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details