தமிழ்நாடு

tamil nadu

2020இல் சைபர் கிரைம் புகாரில் 62 விழுக்காடு நிதி மோசடி புகார்!

By

Published : Dec 25, 2020, 10:28 AM IST

டெல்லி: 2020இல் பதிவுசெய்யப்பட்ட சைபர் கிரைம் புகார்களில் 62 விழுக்காடு நிதி மோசடிகளுடன் தொடர்புடையவை என டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/25-December-2020/9999813_291_9999813_1608869261802.png
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/25-December-2020/9999813_291_9999813_1608869261802.png

இது குறித்து டெல்லி காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்றதால், சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இதில் 2020ஆம் ஆண்டில் சைபர் கிரைம் புகார்களில், சுமார் 62 விழுக்காடு நிதி மோசடிகள், 24 விழுக்காடு ஆன்லைன் துன்புறுத்தல், மீதமுள்ள 14 விழுக்காடு ஹேக்கிங், தரவு திருட்டு தொடர்பான குற்றங்களாகப் பதிவாகியுள்ளன.

இந்தப் புகார்களில் 24 விழுக்காடு சமூக வலைதளங்களின் வழியாக அரங்கேறியுள்ளன. குறிப்பாக பாலியல் தொந்தரவு தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சைபர் குற்றங்களில் தொடர்புடையதாக 214 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...ரூ.26 கோடி ஜிஎஸ்டி கடன் மோசடி - ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details