தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 12:46 PM IST

ETV Bharat / international

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இந்தியா வருகை - பிரதமர் மோடி உடன் முக்கிய பேச்சுவார்த்தை!

G20 summit: ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இன்று (செப்.8) தலைநகர் டெல்லி வருகிறார்.

G20 summit: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இந்தியா வருகை - பிரதமர் மோடி உடன் முக்கிய பேச்சுவார்த்தை!
G20 summit

வாஷிங்டன்: ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில், செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை, இந்தியா இம்முறை தலைமை ஏற்று நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள், வந்தவண்ணம் உள்ளனர்.

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகள் உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இம்முறை, ஜி20 உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது.

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செப்.7ஆம் தேதி, இந்தியா புறப்பட்டார். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு, கடந்த 5ஆம் தேதி, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படாத நிலையில், அவர் இந்தியப் பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜோ பைடன், இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி, அவரது சந்திப்புகள் மற்றும் மற்ற செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பது தொடர்பாக, அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி கூறியதாவது, வளரும் நாடுகளுக்கு பொருளாதார வாய்ப்பை வழங்குவது, காலநிலை முதல் தொழில்நுட்பம் வரை அமெரிக்க மக்களுக்கு முக்கிய முன்னுரிமைகளில் முன்னேற்றம் காண்பது மற்றும் ஜி 20 மாநாட்டில், அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே, அதிபர் பைடனின் முழுக்கவனமும் இருக்கும். பிரதமர் மோடி உடன், சர்வதேச அளவிலான முக்கிய விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: G20 Summit: ஜி20 மாநாட்டில் இந்தியா நிலைநிறுத்தும் பிரதிநிதித்துவம் என்ன? - பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்

ABOUT THE AUTHOR

...view details