சியோல்:கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், வட கொரியாவின் "சட்டவிரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களால்" அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் பற்றி விவாதித்தாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலடி தருகிற வகையில், நேற்று (நவம்பர் 17) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றையும், குறுகிய தூர ஏவுகணை ஒன்றையும் வடகோரியா சோதித்துள்ளது. ஹொக்கைடோவிற்கு மேற்கே சுமார் 210 கிமீ (130 மைல்) கடலில் ஏவுகணை விழுந்ததாக ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.