’போக் ஃபிளேயர்’, ’சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்’, ’பிளே காட்’, போன்ற பல அடையாளம் உள்ளவர் தான் டேன் பில்ஸேரியன். இன்ஸ்டாவில் எப்பொழுதும் விதவிதமான மாடல்களுடன் தான் வாழ்ந்து வரும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளைப் பதிவிட்டு இணையத்தின் சிங்கிள் பசங்களின் சாபங்களை சராமாரியாக வாங்கிக் கொள்பவர் தான் ’டேன் பில்ஸேரியன்’.
மிகப்பெரும் மில்லியனரான இவர் தனக்கென ஓர் ராஜாங்கமே அமைத்து அதில், வாரவாராம் உலகின் தலைசிறந்த மாடல்களுடன் எப்போதும் Gun-ஓடும், பெண்ணோடும் சுற்றித் திறிவது தான் இவரது அன்றாட வாழ்க்கை. ”எப்போதும் நமக்கு எது பலவீனமோ, எது நம் கவனத்தை சிதரடிக்குமோ, அதை என்றும் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும்..!” இது தான் டேன் பில்ஸேரியனின் பொன்மொழி.
’மகான்’ படத்தில் வரும் காந்தி மகான் கதாபாத்திரம் சொல்வது போல். “ நம்ம வாழ்க்கை சும்மா ஒரு பணக்காரனா வாழ்ந்து முடிஞ்சதா இருக்கக் கூடாது. ஒரு வாழ்க்கை.., வரலாறா வாழ்ந்துறனும்” எனும் வசனத்திற்கு ஏற்றதாய் நிஜத்தில் வாழ்பவர் தான் ’டேன்’.