தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2019, 1:06 PM IST

ETV Bharat / international

குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விமானம்- ஆறு பேர் பலி

சிலி: குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

குடியிருப்புக்குள் விழுந்த விமானம்


சிலி நாட்டின் பியூர்ட்டோ மாண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் 5 பயணிகள் மற்றும் விமானியுடன் புறப்பட்டது. அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. இதையடுத்து கட்டுப்பாட்டினை இழந்த அந்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்து வந்த பாதுகாப்புப் படையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும், அதை சோதனை செய்த பிறகுதான் விபத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details