தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 29, 2020, 9:47 AM IST

ETV Bharat / international

சிரியா, துருக்கி மோதல்: பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் ?

மாஸ்கோ: துருக்கி-சிரியா படைகளுக்கு இடையே பயங்கர மோதல் நிலவிவரும் சூழலில், அதுகுறித்து நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி, ரஷ்யா அதிபர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

erdogen putin
erdogen putin

மத்திய கிழக்கு நாடான சிரியாவில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் பலியான இந்தப் போரில், சிரியா அரசு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பலான பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பபற்றியது.

அந்நாட்டின் வடமேற்கு மூலையில் துருக்கி நாட்டையொட்டியுள்ள, இத்லிப் மாகாணம் மட்டும் தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனைக் கைப்பற்ற சிரிய கூட்டுப் படையினர், அங்கு தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வந்தனர்.

இதனால் செய்வதறியாது ஆயிரக்கணக்கான சிரியர்கள் அண்டை நாடான துருக்கியை நோக்கிப் படையெடுத்தனர். இந்தச் சிக்கலை தீர்க்க துருக்கி, அதன் எல்லையையொட்டிய இத்லிப் உள்பட சிரிய மாகாணங்களில் 12 கண்காணிப்புக் கூண்டுகளை அமைத்து அங்கு ராணுவத்தைக் குவித்தது. எனினும், போர் நிறுத்த விதிகளை மீறி சிரிய அரசுப் படைகள் அவ்வப்போது அங்கு தாக்குதல் நடத்திவந்தனர்.

இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களாக இத்லிப்பில் சிரியா அரசுப் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக அவர்களுக்கும், துருக்கிக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நேற்று முன்தினம் சிரியா மேற்கொண்ட தாக்குதலில் துருக்கிப் படையைச் சேர்ந்த 29 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், அதனை தணிப்பது குறித்து துருக்கி அதிபர் எர்டோகன், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுடன் நேற்று தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, மோதலை முடிவுக்கு கொண்டுவர நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க :சிரியாவில் துருக்கிப் படையினர் மீது தாக்குதல்; 29 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details