தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2019, 9:43 PM IST

ETV Bharat / international

காட்டுத் தீயை அணைத்தபோது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்

மொக்சிக்கோ: ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து

ஆஸ்திரேலியா நாட்டில் கடும் வெயில் சுட்டெரித்து வருவதன் காரணமாக பைன் மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. அண்மையில் ஜல்பான் டி லா சியரா((alpan de la Sierra)) பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவிய நிலையில், தீயணைப்பு துறையினர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டர் ஒன்று, அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில், கடற்படை குழுவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details