தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு காலக்கெடு!

பாரிஸ்: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை 2020 பிப்ரவரி மாதத்துக்குள் தடுக்காவிட்டால், கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என, சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) எச்சரித்துள்ளது.

By

Published : Oct 18, 2019, 7:18 PM IST

Pakistan will be blacklisted if it doesn't act fast : FATF President

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எனப்படும் எஃப்ஏடிஎஃப் (FATF) அமைப்பின் வருடாந்திர கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எஃப்ஏடிஎஃப் அமைப்பு நிர்வாகிகள் காலக்கெடு கொடுத்து எச்சரித்தனர்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என FATF எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை பிப்ரவரி மாதம் வரை க்ரே பட்டியலில் வைத்திருக்கவும் எஃப்ஏடிஎஃப் முடிவு செய்துள்ளது.

முன்னதாக, 27 அம்ச செயல் திட்டங்களை 2019 அக்டோபர் மாதத்துக்குள் நிறைவேற்றாவிட்டால், ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளைப் போன்று பாகிஸ்தானும் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் எனக் கூறி 'கிரே' பட்டியலில் வைத்தது எஃப்ஏடிஎஃப் அமைப்பு.

இதையும் படிங்க...இந்தியா-சீனா, அமெரிக்காவைச் சுரண்டுகின்றன -டொனால்ட் டிரம்ப் காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details