தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உருமாறிய கரோனா மிகவும் ஆபத்தானது - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

உருமாறிய கரோனா 30 விழுக்காடு கூடுதல் ஆபத்தானவை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

By

Published : Jan 23, 2021, 12:12 PM IST

Boris Johnson
Boris Johnson

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 பரவல் தொடர்ந்து தீவிரமாகவே காணப்படுகிறது. குறிப்பாக, பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவல் காரணமாக நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தற்போது அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். புதிய தடுப்பூசிகள் உருமாறிய கரோனாவை தடுத்து நிறுத்தம் திறன் கொண்டவை. இருப்பினும் தடுப்பூசி அனைவருக்கும் சேர இரண்டு மாதங்களுக்கு மேல் காலம் பிடிக்கும். எனவே, மிகவும் ஆபத்தான உருமாறிய கரோனாவிடமிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என போரிஸ் எச்சரித்துள்ளார்.

உருமாறிய கரோனா 30 விழுக்காடு கூடுதல் ஆபத்தானவை என போரிஸ் எச்சரித்துள்ளார். இதுவரை பிரிட்டன் நாட்டில் 54 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இதுவரை 35 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்துடன், சுமார் 96 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:'இந்தியா உண்மையான நண்பன்' - தடுப்பூசி விநியோகத்துக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details