மூன்று மாதங்களுக்குப் பிறகான தன்னுடைய கடற்பயணத்தை முடித்துக் கொண்டு இத்தாலிய பயணிகள் கப்பலான கோஸ்டா டெலிசோஸா ஜெனோவா நகரத்தைக் கடந்த புதன்கிழமை வந்தடைந்துள்ளது.
பார்சிலோனா கடற்பகுதியில் 35 நாட்களுக்கும் மேலாக மனிதர்களின் தொடர்பற்று இக்கப்பல் பயணித்து வந்த நிலையில், தற்போது அந்நகரின் சுகாதார அலுவலர்களின் தீவிர சோதனைக்குப் பிறகு கரைசேர்ந்த கப்பலின் பயணிகள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.