பாகிஸ்தானில் சமீப நாட்களாகத் தக்காளி உற்பத்தி குறைந்து காணப்படுவதால், தக்காளியின் விற்பனை விலை அதிகளவில் ஏறியுள்ளது. இதனால், மக்கள் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு இந்திய மதிப்பில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையே அதிருப்தி நிலவி வருகிறது.
தனது நாட்டின் தற்போதைய நிலைமையை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், இளம்பெண் தனது திருமணத்தின் வாயிலாக புதிய முயற்சியில் ஈடுபட்டார். அவர், தங்கத்துக்குப் பதிலாக தக்காளியால் தன்னை அலங்காரம் செய்திருந்தார். மணப்பெண்ணின் கை, கழுத்து, தலை என அனைத்துப் பகுதிகளிலும் தக்காளியை ஆபரணங்கள் போல் அணிந்திருந்தார்.