தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 7, 2021, 11:35 AM IST

ETV Bharat / international

பாகிஸ்தானில் நேருக்கு நேர் மோதிய விரைவு ரயில்கள் - 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 30 பேர் உயிரிழந்தனர்.

train collision
விரைவு ரயில்கள்

பாகிஸ்தானின் கோட்கி பகுதியில் இன்று(ஜுன் 7) காலை லாகூரிலிருந்து கராச்சிக்குச் சென்ற சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சர்கோதா செல்லும் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானில் நேருக்கு நேர் மோதிய விரைவு ரயில்கள்

இவ்விபத்தில் சுமார் 14 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்துக்கான காரணம் குறித்து, ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details