தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீன ரசாயன ஆலை வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு!

பெய்ஜிங்: சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

சீன ரசாயன ஆலை வெடிவிபத்து! பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு!

By

Published : Mar 26, 2019, 10:55 AM IST

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரில் செயல்பட்டுவரும் ரசாயன ஆலையில் 21 ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அன்று மதியம் 2.48 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில், தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், பலத்த காயமடைந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முன்னதாக 64 பேர் பலியானதாக கூறப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி மேலும் சிலர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதில் 56 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலைக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள் பெருத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு டீயான்ஜின் மாகாணத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 160 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details