தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை- கொரிய தீபகற்பத்தில் திக்... திக்...!

பியொங்யாங்: வட கொரியா தனது கிழக்குக் கடல் பகுதியில் நடத்திய ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் மூண்டுள்ளது.

By

Published : May 4, 2019, 1:03 PM IST

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை

கடந்த சில ஆண்டுகளாக கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவிவந்த நிலையில், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்கா உடனான உச்சி மாநாடு இரண்டு முறை நடைபெற்றது. இதில் 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக கிம் உறுதியளித்தார்.

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் அம்மாநாடு தோல்வியில் முடிந்தது. இத்தகைய சூழலில், சமீபத்தில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை, கிம் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இத்தகைய சூழலில், வட கொரியா தனது கிழக்குக் கடல் பகுதியில் குறுகிய தூரம் வரை சென்று தாக்கும் சக்திகொண்ட ஏவுகணையை சோதனை செய்துள்ளது. உள்ளூர் நேரப்படி சரியாக 9.06 மணிக்கு இந்தச் சோதனை நடைபெற்றது.

இது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாட்டைச் சேர்ந்த அலுவலர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details