தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 15, 2019, 10:29 AM IST

ETV Bharat / international

'காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் நபர் நானில்லை' - சிரிப்பலையை ஏற்படுத்திய அபிஜித் பானர்ஜி!

நோபல் பரிசு அறிவித்ததை அறிந்த பிறகு உடனே தூக்கத்தைத் தொடர திரும்ப படுக்கறைக்குச் சென்றுவிட்டதாக நகைச்சுவையுடன் அபிஜித் பானர்ஜி, நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அபிஜித் பானர்ஜி

பொருளாதாரத்தில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவின் பூர்வக்கூடியான அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கும் அவரது மனைவியான எஸ்தர் டஃப்லோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு நிறுவனத்தில் அளித்த பேட்டியில், 'நேற்று காலை 6 மணியளவில் அவருக்கும் அவர் மனைவிக்கும் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவித்ததை அறிந்த பிறகு, உடனே அவர் தூக்கத்தைத் தொடர திரும்ப படுக்கறைக்கு சென்றுவிட்டதாக' நகைச்சுவையுடன் கூறினார்.

மேலும் 'தான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் நபர் கிடையாது என்றும்! தூக்கத்தைத் தொடராமல் போவது உடம்பில் நடத்தப்படும் வன்முறை என்பதால் தூங்க சென்றுவிட்டதாகவும்' அபிஜித் பானர்ஜி நக்கலாக கூறியுள்ளார். 'இருப்பினும் இந்த செய்தி இந்தியாவில் இருந்து ஐரோப்பா வரை தெரிந்ததால் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதால், நாங்கள் இருவரும் தூக்கத்தை அதற்கும் மேல் தொடர முடியாமல் கைவிட்டதாகவும்' நகைப்புடன் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ’அமெரிக்காவில் ஜேபிஏஎல் (J-PAL) என்பது அமெரிக்காவில் இருக்கும் வறுமையைக் குறைக்கப் போராடும் ஓர் உலக ஆய்வு மையத்திலும், எம்ஐடி (MIT) மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திலும், தான் பொருளாதாரத் துறையில் சர்வதேச பேராசிரியாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தம்பதியினராக நோபல் பரிசு பெற்றதற்கு ஜேபிஏஎல் மையமும், பல்கலைக்கழகம் தரப்பிலும் அளவுக்கு அதிகமான பாராட்டுகளையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்ததாக அபிஜித் பானர்ஜி கூறினார்.

’உலகளவில் நோபல் பரிசை தம்பதியினராக இதுவரை ஐந்து பேர் தான் வாங்கியுள்ளனர். இந்நிலையில் தாம் அதில் ஆறாவதாக இடம் பெற்றது சிறப்பானது’ என்றும் அபிஜித் பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நோபல் வென்ற இந்தியர் - அபிஜித் பானர்ஜி!

ABOUT THE AUTHOR

...view details