ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி அளித்திருந்தது. அதன்படி, மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுதல் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், தானோ வெள்ளை மாளிகை ஊழியர்களோ முதற்கட்டமாக தடுப்பூசி போட்டு கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதிபரிடம் நெருங்கி பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவசியம் ஏற்படாத வரை, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு இப்போதைக்கு கரோனா தடுப்பூசி போடப்படாது. இந்த மாற்றத்தை மட்டும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளேன்.