தமிழ்நாடு

tamil nadu

ஒரே வாரத்தில் ஆப்கானிஸ்தானில் 2 பயங்கரவாத தாக்குதல்கள்; 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வாஷிங்டன்: ஐஎஸ் பயங்கரவாதக் குழுவினரால் இந்த வாரத்தில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலீல்சாத் தெரித்துள்ளார்.

By

Published : May 15, 2020, 4:47 PM IST

Published : May 15, 2020, 4:47 PM IST

ISIS-K conducted the horrific attacks on a maternity ward and a Funeral
ISIS-K conducted the horrific attacks on a maternity ward and a Funeral

ஆப்கானிஸ்தானில் உள்ள மகப்பேறு மருத்துவமனையிலும், இறந்தவரின் இறுதிச்சடங்கிலும் கடந்த வாரத்தில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. காபுல் மகப்பேறு மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததோடு, 16 பேர் காயமடைந்தனர். இதேபோல் கிழக்கு நங்கர்ஹார் பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 32 பேர் உயிரிழந்ததோடு, 103 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை தாங்கள் செய்யவில்லை என தலிபான் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி முகமது அஸ்ரஃப் கனி, நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலையை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு, தலிபான்கள் உள்ளிட்ட அனைத்துப் பயங்கரவாத குழுக்கள் மீதும் தாக்குதல் நடத்த தேசிய பாதுக்காப்புக் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, அமெரிக்கப் படைகளை அமெரிக்கா திரும்பப் பெற்றது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலீல்சாத், ''ஐஎஸ் பயங்கரவாதக் குழுவினரால் இந்த வாரத்தில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை எதிர்க்கும் விதமாக உள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வானில் எப்போது திரும்பும் இயல்பு நிலை?

ABOUT THE AUTHOR

...view details