ஒவ்கடங்கு:பர்கினோ பசோ நாட்டின் யாகோ மகாணத்தில் உள்ள சோல்கான் கிராமத்திற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்தனர். இந்ததாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய குழுவைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர்,தெரிவித்துள்ளார். இதுவரை, இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பர்கினோ பசோ நாட்டின் அதிபர், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத குழுக்களை நாம் இணைந்து வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.