சென்னை:பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்போது, 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்கள் ஆகும். இதைத்தொடர்ந்து மூன்றாவது நூலாக 'உச்சினியென்பது' என்ற அவரது முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.