தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகை த்ரிஷாவின் காலில் கட்டு.. நடந்தது என்ன?

பிரபல நடிகை த்ரிஷா தனது காலில் கட்டு உடன் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

By

Published : Nov 7, 2022, 4:42 PM IST

நடிகை த்ரிஷாவின் காலில் கட்டு.. நடந்தது என்ன?
நடிகை த்ரிஷாவின் காலில் கட்டு.. நடந்தது என்ன?

நடிகை த்ரிஷா, பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தில் குந்தவையாக நடித்தது ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. PS-1 வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று இயக்குநர் மணிரத்தினம் உள்ளிட்ட படக்குழுவினருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

பொன்னியின் செல்வன் 1 வெற்றி கொண்டாட்டத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அண்மையில், பைசா கோபுரம், ஈபிள் டவர் ஆகியவற்றின் அருகில் நின்றவாறு போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் காலில் கட்டுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு சுற்றுலாவை முடித்துக்கொண்டேன் என்று பதிவிட்டிருந்தார். இதனால் த்ரிஷா ஏதேனும் விபத்தில் சிக்கினாரா? காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளரா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அதோடு கால் வலி காரணமாக ’பொன்னியின் செல்வன்-1’ நன்றி அறிவிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

இதனிடையே த்ரிஷாவின் கால் பகுதியில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாகவே அவர் கட்டுப்போட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் த்ரிஷாவின் தீவிர ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ‘நாயகன் மீண்டும் வர்றான்’ - 35 வருடத்திற்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details