மும்பை:பாலிவுட் உச்ச நட்சத்திரங்களான அலியா பட் - ரன்பீர் கபூர் நேற்று (ஏப்ரல் 14) திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் மும்பை பந்த்ரா அபார்ட்மெண்ட்டில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. இந்த திருமண விழாவில் நடன நிகழ்ச்சி, 25 வகையான உணவு விருந்து இடம்பெற்றன. இதனிடையே ரன்பீர் கபூரின் தாயார் நீத்து கபூர் நடனமாடியது தனிகவனம் பெற்றது.
ரன்பீர்-அலியா திருமணம்... ரசிகர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி...
பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் அலியா பட் - ரன்பீர் கபூர் நேற்று (ஏப்ரல் 14) திருமணம் செய்துகொண்டனர்.
ஆலியாவை கரம் பிடித்த ரன்பீர்; 25 வகை உணவுடன் கமகம விருந்து!
திருமணம் முடிந்தவுடன் அலியா, ரன்பீர் இருவரும் ரசிகர்கள் முன் தோன்றினர். அப்போது இருவரும் அணிந்திருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த உடையை பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் சப்யாச்சி முகர்ஜி வடிவமைத்தார். இதனிடையே ரன்பீர் அலியாவை அலேகாக தூக்கி சென்றது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
இதையும் படிங்க:சூர்யா கூறிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து - எப்படி சொல்லியிருக்கிறார் தெரியுமா?
Last Updated : Apr 15, 2022, 11:36 AM IST