ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அம்மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனையும் ஆதரித்து தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அந்த பரப்புரையின்போது பேசிய அவர், "வரவிருக்கும் தேர்தல் மக்களுக்கு யார் நன்மை செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்களுடன் திமுக கூட்டணியில் இருந்தது, அச்சமயம் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் 10 பேர் இருந்தனர். இருப்பினும் அவர்கள் தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்காக சுமார் 42 கோடிகளை ஒதுக்கி என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.