சென்னை: புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சக்திவேல்(52). ஆயுதப்படை காவலரான இவர் ஓய்வுபெற்ற நீதிபதியும், காவலர்கள் நல வாரியத்தின் தலைவருமான சி.டி. செல்வம் என்பவருக்கு பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 22) காலை நீதிபதியுடன் காரில் அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அசோக் நகர் சிக்னல் ஹாட்சிப்ஸ் அருகே வரும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உடனே, சக்திவேல் காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரிசெய்ய முன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு கைமீறி சென்றதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.