தமிழ்நாடு

tamil nadu

வேலூர் மத்திய சிறையில் 13ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்

By

Published : May 13, 2022, 8:00 PM IST

வேலூர் மத்திய சிறையில் 13ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முருகன் உண்ணாவிரதம்
முருகன் உண்ணாவிரதம்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வரும் முருகன் கடந்த மே 1ஆம் தேதி தொடங்கி 13ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முன்னதாக பரோல் வழங்கக்கோரி ஒன்றிய, மாநில அரசுக்கு கடிதம் வழங்கியும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இதுவரை முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை.

6 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வரும் முருகன், சிறையில் வழங்கும் உணவைத் தவிர்த்து, உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பழங்களை மட்டும் உட்கொள்வதாகவும் சிறைத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:துப்பாக்கிய கொஞ்சம் பாத்துக்கோ..! - ஆபத்தில் சிக்கிய அசால்ட் போலீசார்

ABOUT THE AUTHOR

...view details