கோடைக்காலம் தொடங்கியது முதல், இந்த வருடமும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர, பாதுகாப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், சற்றும் குறையாமல் இருந்து வரும் வெயிலின் தாக்கத்தால், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக சூளகிரி, சின்னார் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததைத் தொடர்ந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் அரை மணி நேரம்வரை பெய்த இந்த மழையால் வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.