தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் இன்று திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது குறித்து அவர், "நாடு முழுவதும் குழந்தைகள் உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க 727 மாவட்டங்களில் சிறப்பு அமர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களில் இத்தகைய விசாரணை அமர்வு மையம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் உள்பட பல துறை அலுவலர்கள் இடம் பெறுவார்கள்.