தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சிறுபான்மை அமைப்புகளை தேச விரோத சக்திகளாக சித்திரிக்கும் என்ஐஏ!'

திருச்சி: தேசிய புலனாய்வு முகமை சிறுபான்மை சமூக அமைப்புகளை தேச விரோத சக்திகளாக சித்திரிப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் குற்றம்சாட்டியுள்ளார்.

By

Published : May 4, 2019, 4:58 PM IST

எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு கூட்டம்

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, உமர் ஃபாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்,

"தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அடுத்து நடைபெறும் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலிலும் எஸ்டிபிஐ -அமமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

சிறுபான்மை சமூக அமைப்புகளை தேச விரோத சக்திகளாக சித்திரிப்பதற்கான வேலைகளில் தேசிய புலனாய்வு முகமை ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் சமீபத்திய செயல்பாடுகள் இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கை சிபிசிஐடி காவல் துறையினரிடம் இருந்து பாஜகவின் அழுத்தம் காரணமாகவே தேசிய புலனாய்வு முகமை வலுக்கட்டாயமாக பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி கும்பகோணம், தஞ்சை, காரைக்கால் ஆகிய இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சோதனை சிறுபான்மை அமைப்புகள் மீதான மக்களின் நல்லெண்ணத்தை குலைக்கும் வகையில் உள்ளது.

எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு கூட்டம்

அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களின் தகுதி நீக்க கோரிக்கையை சபாநாயகர் ஏற்கக் கூடாது. மே 23ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் அதிமுக அரசுக்கு பாதகமாக இருக்கும் என்பதால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கவே மூன்று எம்எல்ஏக்களின் பதவியை பறித்து, சபை எண்ணிக்கையை குறைத்து 116 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details