தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேரம் பேசுவது போல் நடித்து செல்ஃபோன் திருட்டு; சிசிடிவி உதவியோடு போலீஸ் விசாரணை!

திருப்பூர்: செல்ஃபோன் வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சியின் உதவியோடு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

செல்போனை திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சி

By

Published : Oct 18, 2019, 10:54 AM IST

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் பைசல் என்பவர் சொந்தமாக செல்ஃபோன் கடை நடத்திவருகிறார். இவர் கடையில் வியாபாரத்தை கவனத்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் ரூபாய் 8,000 மதிப்புள்ள செல்ஃபோனை வாங்குவது போல் விசாரித்துவிட்டு விலை பேசிக்கொண்டிருந்தார்.

செல்ஃபோன் திருடப்படும் சிசிடிவி காட்சி

சிறிது நேரத்தில் திடீரென அவர் செல்ஃபோனுடன் ஓட்டம் பிடித்து ஏற்கனவே அங்கு தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் அவருடைய நண்பருடன் தப்பிச் சென்றார். செல்ஃபோனுடன் ஓடிய அவரை கண்ட ஊழியர்கள் வெளியே வந்து பிடிக்க முயற்சிக்கும் முன்பே வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் பைசல், திருப்பூர் ஊரக காவல் துறையினரிடம் புகார் அளித்தார். காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க:

ஒரே கோயிலில் ஐந்தாவது முறையாக அரங்கேறிய கொள்ளை - காவல் துறையினர் அதிர்ச்சி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details