தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டீக்கடைக்கு டீ குடிக்க வந்த பாம்பு - பீதியில் தெறித்து ஓடிய மக்கள்

திருநெல்வேலியில் டீ கடையில் பாம்பு புகுந்ததால் டீ குடிக்க வந்த நபர்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டீக்கடைக்குள் புகுந்த பாம்பு; பீதியில் தெறித்து ஓடிய மக்கள்
டீக்கடைக்குள் புகுந்த பாம்பு; பீதியில் தெறித்து ஓடிய மக்கள்

By

Published : Sep 10, 2022, 8:43 PM IST

திருநெல்வேலிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் தினமும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் தொடர்பாக, மனுக்கள் அளிக்க என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வார்கள்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் உணவு மற்றும் தேநீர் அருந்த அலுவலகத்தின் பின்புறத்தில் தனியார் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (செப். 10) காலை முருகன் என்பவர் தனது தேநீர் கடையை திறந்து வியபாரத்தை தொடங்கிய நிலையில் சிலர் தேநீர் அருந்த கடைக்கு உள்ளே வந்தனர்.

அப்போது கடையின் உள்ளே உள்ள சுவற்றில் கருமையான நிறத்தில் சுமார் 2 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நின்றிருந்தது. இதனைப்பார்த்த கடைக்கு தேநீர் அருந்த வந்தவர்கள் அச்சத்தில் கடையைவிட்டு அலறியடித்து வெளியில் ஓடினர். பின்னர், உடனடியாக கடையின் உரிமையாளர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

டீக்கடைக்குள் புகுந்த பாம்பு

அதற்குள் அந்த பாம்பு, ‘நானும் டீ குடிக்க தான் வந்திருக்கேன், எனக்கு ஒரு டீ சொல்லுங்க’ என்ற பானியில் அங்கிருந்த டீ கப்பை உருட்டிவிட்டு அதனருகே சுருண்டது. இதற்கிடையே தகவலின் பேரில் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், கடைக்குள் தஞ்சமடைந்த பாம்பை மிக லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

பாம்பு பிடிக்கப்பட்டதை அடுத்து பதட்டத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் பயம் நீங்கி தேநீர் அருந்திச் சென்றனர். கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பாரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க:வைரல் வீடியோ...வடமாநில இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் சைக்கோ மனிதன்...

ABOUT THE AUTHOR

...view details