தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2020, 6:32 AM IST

ETV Bharat / city

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூக்கம் - 10 சவரன் தங்க நகை கொள்ளை!

மதுரை: சோழவந்தான் அருகே காற்றுகாக கதவை திறந்து வைத்து தூங்கியவர் வீட்டில் பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

robbery
robbery

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் கீழப்பட்டியில் வசித்து வருபவர் மூனறிவு. இவர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று இரவு தூங்குவற்கு முன் காற்றுகாக தனது வீட்டின் முன் பக்க கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார்.

இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் இவரது வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகளைத் திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (டிச.10) காலை மூனறிவு பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுற்றார். உடனே திருட்டு குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த இடம்

பின்னர், சம்பவ நடந்த இடத்திற்கு காவல்துறையினர், கைரேகை நிபுணர்களுடன் வந்து தடயங்களை சேகரித்து திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details